×

இணையதளத்தில் சாட்டிங் செய்து அப்பாவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வாலிபர்கள் இருவர் கைது

கோவை, மார்ச் 21: கோவை சாய்பாபாகாலனி கே.கே.புதூர் சுப்பையன் வீதியை சேர்ந்தவர் சிவநேசன். பூ அலங்கார பணி செய்து வருகிறார். இவர் நேற்று காலை 6 மணியளவில் தனது டூவிலரில் கோவை பூமார்க்கெட்டிற்கு பூ வாங்க சென்றார். அவர், கே.கே.புதூர் கணபதி லேஅவுட் பகுதி அருகே வந்த போது திடீரென 2 பேர் அவரை தடுத்து நிறுத்தி, கத்தியை காண்பித்து அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்தனர். சிவநேசன் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள், 2 பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் தங்களிடம் இருந்த கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில், சாய்பாபாகாலனி போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து இரண்டு பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில், மதியம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் மேட்டுப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, 2 பேர் போலீசாரை பார்த்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், நரசிம்மநாயக்கன்பாளையம் சேர்ந்த பிரபாகரன்(21), கே.கே.புதூர் சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ்(21) என்பதும், இவர்கள் சிவநேசனிடம் கத்தி காண்பித்து பணம் பறித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், பிரபாகரன், விக்னேஷ் 2 பேரும் கணினி இயக்குவதில் கைதேர்ந்தவர்கள். இவர்கள் வேலை செய்து வரும் மெக்கானிக் தொழிலில் வருமானம் குறைவு என்பதால், அதிக வருமானம் கிடைக்க யோசித்த போது, இணையதளத்தில் சாட்டிங் செய்து பலரை ஒரு பாலின சேர்க்கைக்கு அழைத்து பணம் சம்பாதித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஐடி நிறுவன இன்ஜினியராக பணியாற்றி வந்த 23 வயது வாலிபரிடம்  சாட்டிங் செய்து, அவரை கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட் பின்புறம் உள்ள காலியிடத்திற்கு அழைத்து சென்று, அங்கு அவருடன் உடலுறவு வைத்து கொண்டனர். பின்னர், திடீரென அவர்கள் இருவரும் இன்ஜினியரை தாக்கி அவரிடம் இருந்த ரூ.9 ஆயிரம், செல்போன், மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றனர். இது போல், பலரிடம் இவர்கள் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிடம் பணம், நகை பறிகொடுத்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : men ,
× RELATED ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்