ஜலகண்டாபுரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் ; 55 பேர் மீது வழக்கு

ஜலகண்டாபுரம், மார்ச் 21:பொள்ளாச்சியில் நடந்த பாலியல்  வன்கொடுமைகளை கண்டித்து, ஜலகண்டாபுரம் பஸ் ஸ்டாண்டில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து, நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில்,  அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, தோரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் விஜயா, ஜலகண்டாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ராஜாத்தி, நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

Related Stories: