×

கெங்கவல்லி அருகே போக்சோவில் தேடப்பட்ட வாலிபர் நீதிமன்றத்தில் சரண்

கெங்கவல்லி, மார்ச் 21: கெங்கவல்லி அருகே போக்சோ சட்டத்தில் தேடப்பட்ட வாலிபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் நீதிமன்ற காலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கெங்கவல்லி அருகே தெடாவூர் பகுதியை சேர்ந்த 17வயது மாணவி, சேலம் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த அர்ச்சுனன் மகன் மணிகண்டன்(21) என்பவர், மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றார். இது குறித்து மாணவியின் பெற்றோர், கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில், கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி மணிகண்டன் மீது புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் போக்சோ மற்றும் கடத்தல் வழக்கு பதிவு செய்து, மணிகண்டனை தேடி வந்தனர். இந்நிலையில் மாணவி புகார் கொடுத்த 2 நாளில், வீட்டிற்கு வந்தார். இதையொட்டி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெற்றோரிடம் மாணவியை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த மணிகண்டன், கடந்த 8ம் தேதி, சேலம் மகிளா நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக கெங்கவல்லி இன்ஸ்பெக்டர்(பொ) பவுலேஷ், மணிகண்டனை ஒருநாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Saran ,courthouse ,courts ,Kangavalli ,Paxo ,
× RELATED அம்பத்தூர் பேருந்து நிலையம் ₹12...