×

2வது நாள் மனுதாக்கலுக்கு வேட்பாளர்கள் வரவில்லை

நாமக்கல், மார்ச் 21: நாமக்கல்லில் மனுதாக்கல் செய்ய வேட்பாளர்கள் யாரும் வராததால், 2வது நாளான நேற்று கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில், அடுத்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடக்கிறது.  இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில் சுயேட்சை வேட்பாளர் ரமேஷ் மனு தாக்கல் செய்தார். 2வது நாளான நேற்று, யாரும் வேட்பு மனுதாக்கல் செய்ய வரவில்லை. இதனால், கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. அரசியல் கட்சியினர் வேட்பு மனுதாக்கல் செய்ய வரக்கூடும் என்பதால், கலெக்டர் அலுவலகத்தில் டிஎஸ்பி காந்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags :
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா