×

புளுதியூர் சந்தையில் ₹27 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

அரூர், மார்ச் 21: அரூர் அருகே புளுதியூர் சந்தையில், ₹27 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது.  தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமையில் சந்தை நடக்கிறது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்த சந்தையில், வாரந்தோறும் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது. இங்கு நடைபெறும் கால்நடை சந்தை பிரசித்தி பெற்றது. சென்னை, கோவை, பொள்ளாச்சி, மதுரை, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் மாநிலம் முழுவதும் இருந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை வாங்க வியாபாரிகள் இங்கு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் இறைச்சி மாடு ₹23,000 முதல் ₹46,500 வரையும், ஆடு ₹3,600 முதல் ₹7,300 வரையும் விற்பனையானது. மொத்தம் ₹27 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Puliyathi ,
× RELATED புளுதியூர் சந்தையில் 34 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை