×

குமாரபாளையத்தில் 25 மாணவர்களுக்கு இலவச கல்வி

குமாரபாளையம், மார்ச் 21: கல்வியில் ஆர்வமுள்ள, ஏழ்மை மாணவர்கள் 25 பேருக்கு நம்ம குமாரபாளையம் சேவை அமைப்பு இலவச கல்வி வழங்குகிறது. தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நம்ம குமாரபாளையம் சேவை அமைப்பினர் கடந்த ஆண்டு கல்வியில் ஆர்வமுள்ள 25 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, குமாரபாளையம் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இலவச கல்வி அளித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக 2வது ஆண்டாக படிப்பில் ஆர்வமுள்ள பிளஸ்2 மாணவர்கள் 25பேரை தேர்வு செய்து, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இலவச கல்வி வழங்கிட ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுகுறித்து நம்ம குமாரபாளையம் சேவை அமைப்பின்  தலைமை தன்னார்வலர் ஓம்சரவணா கூறுகையில், சமூகத்தில் நலிவடைந்த, கல்வி கற்பதில் ஆர்வமுள்ள, ஏழை எளிய மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு போதிய கல்வி அளிக்கப்படுகிறது.  சமுதாயத்தில் தலைசிறந்த மனிதர்களாக மாற்றும் வகையில் அக்னி சிறகுகள் என்ற பிரிவின் கீழ் இந்த  திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான மாணவ, மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. எனவே, கல்வியில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் தங்களை பற்றிய விபரங்களை குமாரபாளையத்தில் உள்ள நம்ம குமாரபாளையம் அலுவலகத்தில் படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம் என்றார்.

Tags : Kumarapalayam ,
× RELATED குமாரபாளையம் அருகே கோர விபத்து பனை...