புதுவை காங். சமூக வலைதளம், ஊடக பிரிவு நிர்வாகிகள் நியமனம்

புதுச்சேரி,  மார்ச் 21:  புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் சமூக வலைதளம் மற்றும்  ஊடக பிாிவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒப்புதலோடு புதுவை  பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் நிர்வாகிகள் நியமனம்  செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட தலைவர்களாக அசோக்குமார் (தெற்கு), சிரில்  அந்தோணி (வடக்கு), இளம்பிரியன் (மத்திய பகுதி), முருகபூபதி (காரைக்கால்)  ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். தொகுதி தலைவர்களாக மண்ணாடிப்பட்டு-  ஆனந்தன், திருபுவனை- ராஜாராம், ஊசுடு- ராஜேஷ், மங்கலம்- விநாயகமூர்த்தி, வில்லியனூர்-ஷாஜகான், கதிர்காமம்- எத்தியன் போஸ், இந்திராநகர்- தரன்,  தட்டாஞ்சாவடி- வெங்கடகிருஷ்ணன், லாஸ்பேட்டை- லோகேஷ்வரன் ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும் காலாப்பட்டு- விஜயபிரதாப்,  முத்தியால்பேட்டை-ஜோஸ், ராஜ்பவன்-செல்வகுமாரன், உருளையன்பேட்டை-சரவணன்,  நெல்லித்தோப்பு- இருதயராஜ், மணவெளி- செந்தில்குமரன், ஏம்பலம்- புஷ்பராஜ், நெட்டப்பாக்கம்- சக்திவேல், பாகூர்- முத்துசாமி, மாகே- முகமது முபாஷ்,  ஏனாம்- ேஷக் அப்துல் பையபாணி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  இத்தகவலை புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

Related Stories: