தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு பயிற்சி

புதுச்சேரி, மார்ச் 21: புதுவை கலெக்டர் அலுவலகத்தில் உதவி தேர்தல் செலவின பார்வையாளர், மற்றும் பறக்கும் படையினருக்கு பயிற்சி முகாம் நடந்தது. புதுவை வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் தேர்தல் உதவி செலவின பார்வையாளர்கள், பறக்கும் படையினர், வீடியோ கண்காணிப்புக் குழுவினருக்கு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதில் மத்திய தேர்தல் செலவின பார்வையாளர்கள் அசிம்குமார் சக்கரபர்தி, அஜித் டன், துணை மாவட்ட தேர்தல் அதிகாரி சக்திவேல், வருமான வரித்துறை தனி அதிகாரி பாலமுரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். புதுச்சேரி மக்களவை தொகுதிக்கு அதிகபட்சம் ரூ.54 லட்சம் வரையிலும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு ரூ.20 லட்சம் வரையிலும் வேட்பாளர்கள் செலவழிக்க அனுமதிக்கப்படுகிறது. ஆகையால் செலவு கணக்கு விவரங்களை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: