பாஜவுடன் கூட்டணிக்கு எதிர்ப்பு தமாகா நிர்வாகி காங்.கில் இணைந்தார்

சுரண்டை, மார்ச் 21:  பாஜவுடன் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா கொள்கை பரப்பு செயலாளர், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.

தமாகா மாநில கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலத்தின் தம்பி மகனுமான சங்கை கணேசன், அக்கட்சியில் இருந்து விலகி ஆதரவாளர்களுடன் நெல்லை மேற்கு மாவட்ட காங். தலைவர் பழனி நாடார் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட காங். ஓபிசி தலைவர் திருஞானம், மாவட்ட காங். பொதுச்செயலாளர் குருசாமி பாண்டியன், நகர தலைவர்கள் புளியங்குடி பால்ராஜ், சிவகிரி சண்முகசுந்தரம், சுரண்டை ஜெயபால், நிர்வாகிகள் முகமது ஜவகர்லால், காந்தி, மாநில பேச்சாளர் பால்துரை, சிங்கராஜ், விநாயகம், மருதப்பன், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாஜவுடன் கூட்டணி வைத்ததால் தமாகாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்ததாக சங்கை கணேசன் தெரிவித்தார்.

Related Stories: