தருவை எப்எக்ஸ் கல்லூரியில் 3 மாவட்ட கிரிக்கெட் போட்டி

நெல்லை, மார்ச் 21:  தருவை எப்எக்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் மண்டல அளவில் ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். நெல்லை அடுத்த தருவை எப்எக்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் மண்டல அளவில் ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு  தொழில்நுட்பக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினர். இதே போல் தருவை எப்எக்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர்களும் அபாரமாக விளையாடி தொடர்ந்து 2ம் முறையாக வெற்றி பெற்றனர். இவர்களை அணித்தலைவர் ரெஜின் பால்சன் வழிநடத்தினார். சிறந்த வீரர்களாக ராஜ்குமார், சிம்சன் மாணிக்கராஜ், சந்தணகுமார், செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்டனர். மண்டல அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்த அணியினரை ஸ்காட் கல்விக் குழும நிறுவனர் கிளிட்டஸ்பாபு, நிர்வாக இயக்குநர் அருண்பாபு, கல்லூரி முதல்வர் ரூபஸ் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டினர். ஏற்பாடுகளை கல்லூரி உடற் கல்வி இயக்குநர் முத்துசாமி செய்திருந்தார்.

Related Stories: