நெல்லை மாவட்டம் வள்ளியூரிலிருந்து கிழக்கில் 15 கி.மீட்டர் தொலைவில் சித்தூரில் மகாராஜா கோயில் உள் ளது. நம்பியாற்றின் தென்கரையை அடையாளமாக காட்டப்படுவதால் தென்கரை மகாராஜா கோயில் என்றழைக்கப்படுகிறது. சித்தூரின் பழைய பெயர் வன்னிகளத்தி என்பது வாய்மொழியாக கூறும் மரபாகும். தென்கரை மகாராஜன் சாஸ்தா சபரிமலை சுவாமி ஐயப்பனின் தம்பியாக கருதப்படுகிறார். சாஸ்தாவின் துணை தெய்வங்களான பூதத்தானையும் கோயிலில் உதித்த பிற தெய்வங்களையும் வைக்கும் மரபு உள்ளது. சாஸ்தா தனி வழிபாடாகவும் குடும்ப வழிபாடாகவும் திகழ்கிறது. வள்ளியூர் வழி வரும் சாலை கிழக்கு பக்கம் முடிவதால் பக்தர்கள் வடக்குவாசல் வழியாக கோயிலுக்கு வருகின்றனர். கோயிலின் தென்மேற்கு கன்னிமூலையில் தளவாய் மாடசாமி கோயிலும் வடக்கு பிரகாரத்தில் மருதாணி மரத்தின்கீழ் பேச்சியம்மன் கோயிலும் உள்ளது. தளவாய் கோயிலுக்கு மருதாணி மரமே கூரையாக உள்ளது. பெரிய கோயில் வெளியே நம்பியாற்றின் கரையை ஒட்டி வடக்கு பக்கம் வன்னின் கோவிலும், வடக்கிழக்கு மூலையில் வீரமணி சாம்பானின் கோயிலும் உள்ளது. கோயிலின் முன்னே திறந்தவெளி ஓட்டுகூரை மண்டபம் உள்ளது. இக்கோயில் (கொல்லம் 1060ல்) கிபி 1885 மகாராஜா சாம்பான் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. நம்பியாற்றின் வடக்கே, பெரிய கோயிலின் எதிரே 1 கி.மீட்டர் தொலைவில் வடக்குவாய்செல்வி அம்மன் கோயில் உள்ளது.