ராதாபுரம், மார்ச் 21: ராதாபுரம் பகுதியில் காட்சிப்பொருளான குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ராதாபுரம் தெற்குத்தெருவில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி உள்ளது. இப்பகுதி பொதுமக்களின் தண்ணீர் தேவை, இத்தொட்டி மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக இந்த குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தண்ணீர் வசதியின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர்.