கடையநல்லூர், மார்ச் 21: கடையநல்லூர் பகுதியில் கூட்டணி கட்சியினர், அனைத்து சமுதாயத்தினரை சந்தித்து திமுக வேட்பாளர் தனுஷ்குமார் ஆதரவு திரட்டினார். 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தனுஷ்குமார், நேற்று கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கிலிபட்டி, கடையநல்லூர், காசிதர்மம், இடைகால் பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், அனைத்து சமுதாய தலைவர்கள், முஸ்லிம் ஜமாஅத்தார்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், அவைத்தலைவர் முத்துப்பாண்டி, பொதுக்குழு காசிதர்மம் துரை, ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, நகர செயலாளர் சேகனா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இலத்தூர் ஆறுமுகச்சாமி, துணை அமைப்பாளர்கள் ஹக்கீம், சரவணக்குமார், முத்துவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செங்கோட்டை வக்கீல் வெங்கடேசன், ஊராட்சி செயலாளர்கள் சுப்பிரமணியன், பொய்கை மூக்கையா, தொமுச ஜெயக்குமார், தங்கையா, செல்லத்துரை, பிள்ளையார்பாண்டியன், திருமலைக்குமார், செல்வராஜ், முருகன், கடையநல்லூர் நகர திமுக நிர்வாகிகள் சங்கரன், பால்துரை, அப்துல் வகாப், மஸ்தான், மக்தூம், ராமபுலி, வானுவர்அலி, ஜமீம்ஷாகிபு, மைதீன், ஹரிதாஸ், பெருமாள், துரை, ரகுமத்துல்லா, ராமையா, மாரியப்பன், காளிமுத்து, சுடலைமுத்து, காங்கிரஸ் சமுத்திரம், மதிமுக முருகன், முஸ்லிம் லீக் லத்தீப், இக்பால், ஹனீபா, விடுதலை சிறுத்தைகள் கட்சி பாக்கியநாதன், சிபிஐ முத்துசாமி, சிபிஎம் ராஜசேகர், தமிழ்புலிகள் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.