×

விருத்தாசலத்தில் முதியவர் மர்ம சாவு

விருத்தாசலம், மார்ச் 21: பண்ருட்டி மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம் (59). கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வீட்டிற்கு வருவார். அதுவரை கோயில், குளம் உள்ளிட்ட பல இடங்களில் சுற்றித் திரிந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு புற்றுநோய் கட்டி இருந்து, தற்போது அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அவரை அனுமதித்து அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தியுள்ளனர். இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இந்நிலையில் நேற்று விருத்தாசலம் இரட்டை தெரு அருகே ஏகாம்பரம் மர்மமாக இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது சட்டைப்பையில் இருந்த செல்போன் நம்பரை வைத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்தனர். உடன் அங்கு வந்த அவரது மகன் ஜெகநாதன் மற்றும் குடும்பத்தார் ஏகாம்பரத்தை அடையாளம் கண்டு உறுதி செய்தனர். இதையடுத்து ஏகாம்பரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஏகாம்பரத்தின் மகன் ஜெகநாதன் கொடுத்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : death ,Vriddhachalam ,
× RELATED மாத்திரை வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு