×

பூச்சி மருந்து குடித்து கூலி தொழிலாளி சாவு

விருத்தாசலம், மார்ச் 21: மங்கலம்பேட்டை அருகே உள்ள விஜயமாநகரம் புதுவிளாங்குளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பாலமுருகன் (30). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 14 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி மகாலட்சுமி (24) என்ற மனைவி உள்ளார். குழந்தை இல்லை. கணவன், மனைவி இருவருக்கும் குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாலமுருகன், நேற்று முன்தினம் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்று விட்டு திரும்ப வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனையறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாலமுருகனின் மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Injury worker ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது