×

அதிக மது குடித்த வாலிபர் பலி

நெய்வேலி, மார்ச் 21: நெய்வேலி மந்தாரக்குப்பம் ரைஸ்மில் தெருவில் வசித்து வருபவர் அமுதா. அரக்கோணத்தைச் சேர்ந்த இவரது அண்ணன் மகன் ராஜா (30) என்பவர் அமுதா வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்த ராஜா வீட்டிலேயே மயங்கி விழுந்து கிடந்தார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி உறவினர் தீனதயாளன் அளித்த புகாரின்பேரில் மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் மீனாள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது