வாகனம் மோதி மூதாட்டி படுகாயம்

புதுக்கோட்டை, மார்ச் 21: புதுக்கோட்டை அருகே ஆறுமுகம்நகர் பண்டாரம் மனைவி சின்னம்மாள்(70). இவர் நேற்று முன்தினம் மாலை புதுக்கோட்டை தனியார் திருமண மண்டபம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது தூத்துக்குடியில் இருந்து நெல்லை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சின்னம்மாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுக்கோட்டை எஸ்.ஐ. மாதவராஜா விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: