மாணவி மாயம்

தூத்துக்குடி,மார்ச் 21: தூத்துக்குடியில் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் மோசஸ். இவரது  மகள் மோனிஷா (19). தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் கடந்த 15ம் தேதி வீட்டை விட்டுச் சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. இதையடுத்து பெற்றோர், வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: