தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்த 2பேருக்கு வலை

புதுக்கோட்டை, மார்ச் 21: புதுக்கோட்டை அருகே அல்லிகுளம் ஆண்டாள்நகரை சேர்ந்தவர் வேலு மகன் நடராஜன்(54). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேவதாஸ் மகன் ஞானராஜ்(25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஞானராஜ், அவரது நண்பரான திருப்பதி மகன் காளிமுத்து(19) ஆகிய இருவரும் நடராஜன் வீட்டிற்கு சென்று அவதூறாகபேசி மிரட்டல் விடுத்தனர். புகாரின்பேரில் புதுக்கோட்டை எஸ்.ஐ.அந்தோணிராஜா வழக்கு பதிந்து மிரட்டல் விடுத்த ஞானராஜ் உள்ளிட்ட 2பேரையும் தேடி வருகிறார்.

Related Stories: