×

நாகை அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1.50 லட்சம் மது பறிமுதல் தப்பி ஓடிய டிரைவருக்கு வலை

காரைக்கால், மார்ச் 21: நாகை அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. காரைக்கால் பிராவிடன் ஆறு அருகே டி.ஆர்.பட்டினம் காவல் நிலைய எஸ்ஐ பெருமாள் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்காலில் இருந்து நாகை நோக்கி ஒரு கார் வந்தது. போலீசார் அந்த காரை தடுத்தனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. போலீசாரிடம் டூவீலர்கள் மட்டுமே இருந்ததால், அந்த காரை விரட்டிச்செல்ல முடியவில்லை.இதனால் நாகை அருகே மேலவாஞ்சூரில் உள்ள சோதனை சாவடிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காரை பிடிக்க பேரிகார்டுகளை நடுரோட்டில் வைத்து சாலையை மறித்து சோதனை சாவடியில் போலீசார் காத்திருந்தனர். இந்த தகவல் எப்படியே காரை ஓட்டி வந்த டிரைவருக்கு தெரிந்து விட்டது. இதனால் சோதனை சாவடிக்கு ஒன்றரை கிமீ தூரத்துக்கு முன்பே காரை நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பி ஓடி விட்டார்.இதுபற்றி அறிந்ததும் போலீசார் சென்று, காரை திறந்து சோதனையிட்டனர். இதில் காரின் பின் சீட் மற்றும் டிக்கியில் பெட்டி பெட்டியாக புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்தது. ரூ.1.50 லட்சம் மதிப்புடைய மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.2.50 லட்சம் மதிப்புடைய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Naga ,
× RELATED காதல் ரகசியத்தை உடைத்த நாக சைதன்யா, சோபிதா