வேதாரண்யம், மார்ச் 21: நாகை வாய்மேடு சேனாதிகாட்டை சேர்ந்த குஞ்சு மகன் செல்லதுரை (40). தேமுதிக மேற்கு ஒன்றிய செயலாளர். இவர் மீது வாய்மேடு போலீசில் பல்வேறு கொலை முயற்சி மற்றும் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது இவர் மீது வாய்மேடு போலீசில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாகை எஸ்பி விஜயகுமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவுப்படி செல்லதுரை குண்டர் தடுப்பு காவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.