×

வீரபத்திர சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா

நாகை. மார்ச் 21: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கச்சநகரத்தில் உள்ள பூர்ணாம்பிகை புஷ்களாம்பிகை சமேத குழந்தையப்ப அய்யனார் வீரபத்திர
சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில்  ஆண்டுதோறும்  பங்குனி உத்தர பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நேற்று முன்தினம் பங்குனி பெருவிழா  விக்னேஷ்வர பூஜையுடன் யாகபூஜை தொடங்கியது. அன்று இரவு முதல் கால யாக பூஜையும், நேற்று இரண்டாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. அதை தொடர்ந்து பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அய்யனாருக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து யாக பூஜையில் பூஜிக்கப்பட்ட  புனிதநீர் கொண்டு அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு அய்யனார் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா காட்சிநடைபெற்றது.

Tags : Murali ,festival ,Veerabhadra Swamy ,
× RELATED கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபருக்கு வலை