×

தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி பலி

ஆரணி, மார்ச் 21: ஆரணி அடுத்த சேவூரை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி நிஷாந்தி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். நேற்று காலை வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமி அனுஷி (5) திடீரென காணவில்லை. அக்கம்பக்கம் என பல இடங்களில் தேடினர். அப்போது வீட்டின் அருகே உள்ள குடிநீர் தொட்டியில் அனுஷி மயங்கிய நிலையில் கிடந்தது தெரிந்தது. உடனடியாக சிறுமியை ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுமி அனுஷி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...