×

டிவைடரில் லாரி மோதி விபத்து

உடுமலை, மார்ச் 20: உடுமலை அருகே சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த டிவைடரில் லாரி மோதி விபத்தில் சிக்கியது.உடுமலை-பொள்ளாச்சி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, சாலையின் நடுவே கான்கிரீட் ஸ்லாப்புகளை கொண்ட டிவைடர் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அமைக்கப்படும் டிவைடரில் ரிப்ளக்டர்கள் மற்றும் வர்ணம் பூசப்படாததால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை பொள்ளாச்சியில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற லாரி, மாரியம்மன் கோயில் அருகே டிவைடரில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் லாரியை மீட்டு சாலையோரம் நிறுத்தினர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சாலையோரம் வைக்கப்பட்டிருநத் குப்பை தொட்டியில் இடிக்காமல் இருக்க லாரியை வலது பக்கம் திருப்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள டிவைடர்களில் முறையாக ரிப்லெக்டர் பொருத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Truck accident ,
× RELATED கப்பலூர் நான்குவழிச்சாலையில் சர்வீஸ்...