×

ஆவணமின்றி கொண்டு சென்ற 41 பேரிடம் ரூ.1.41 கோடி பறிமுதல்

ஊட்டி, மார்ச் 20: நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையின் போது, இதுவரை ரூ.1 கோடியே 41 லட்சத்து 92 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டது. ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு, தலா 3 என மொத்தம் 9 பறக்கும் படைகள், 9 நிலை மற்றும் நகரும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இக்குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இக்குழுவினர் கடந்த 9 நாட்களாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10ம் தேதி முதல் நேற்று வரை நடந்த வாகன சோதனையில், நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 41 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 41 லட்சத்து 92 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டது. தாங்கள் கொண்டு சென்ற பணத்திற்கு முறையாக ஆவணங்கள் சமர்ப்பித்த 11 பேருக்கு இதுவரை ரூ.16 லட்சத்து 80 ஆயிரத்து 510 திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...