கோவை, மார்ச் 20: கோவையில் 4 பெண்களிடம் 27.5 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டது. கோவை கணபதி சங்கனூர் பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்பவர் மனைவி துளசி (75). இவர் கணபதியில் இருந்து காந்திபுரத்திற்கு பஸ்சில் வந்த போது அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை காணவில்லை. பஸ்சில் மர்ம நபர் நகை பறித்து தப்பியதாக தெரிகிறது. இதேபோல் திருப்பூர் அணுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி மனைவி ராஜாமணி (63) என்பவர் பஸ்சில் நேற்று கோவை வந்தார். காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் அவர் பஸ்சில் இருந்து இறங்கிய போது 5.5 பவுன் தங்க நகையை காணவில்லை. நகையை மர்ம நபர் திருடிய தப்பியதாக தெரிகிறது. இது தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.