×

கோவையில் 4 பெண்களிடம் 27.5 பவுன் நகை பறிப்பு

கோவை, மார்ச் 20: கோவையில் 4 பெண்களிடம் 27.5 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டது.  கோவை கணபதி சங்கனூர் பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்பவர் மனைவி துளசி (75). இவர் கணபதியில் இருந்து காந்திபுரத்திற்கு பஸ்சில் வந்த போது அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை காணவில்லை. பஸ்சில் மர்ம நபர் நகை பறித்து தப்பியதாக தெரிகிறது. இதேபோல் திருப்பூர் அணுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி மனைவி ராஜாமணி (63) என்பவர் பஸ்சில் நேற்று கோவை வந்தார். காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் அவர் பஸ்சில் இருந்து இறங்கிய போது 5.5 பவுன் தங்க நகையை காணவில்லை. நகையை மர்ம நபர் திருடிய தப்பியதாக தெரிகிறது. இது தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ேகாவை ஆண்டக்காபாளையம் பகுதியை சேர்ந்த சம்பத்குமார் மனைவி பிரேமபிரியா (29). இவர் நேற்று முன் தினம் அதே பகுதியில் ரோட்டில் மொபட்டில் சென்ற போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேர் 5 பவுன் தங்க நகை பறித்து தப்பினர். பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர். சாயிபாபாகாலனி பகுதியை சேர்ந்த எமீமா மேரி (52) என்பவர் மேட்டுப்பாளையம் ரோட்டில் நடந்து சென்ற போது பைக்கில் வந்த 2 பேர் எமீமா மேரி அணிந்திருந்த 15 பவுன் தங்க நகைகளை பறித்து தப்பினர். இந்த நகை பறிப்பு தொடர்பாக சாயிபாபா காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags : women ,Coimbatore ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது