9.31 லட்ச ரூபாய் மோசடி

கோவை, மார்ச் 20: சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. அரிசி மில் உரிமையாளர். இவர் ரத்தினபுரி ஹோசிமின் நகர் பகுதியை சேர்ந்த குமார் (35) என்பவரிடம் 9.31 லட்ச ரூபாய்க்கு அரிசி வாங்கினார் ஆனால் அரிசி  வாங்கிய பணத்தை திருப்பி தரவில்லை. இது தொடர்பாக பல முறை கேட்டும் குமார் பணம் தர மறுத்து விட்டார். இது தொடர்பாக பாலசுப்ரமணி அளித்த புகாரின் பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

   

Related Stories: