எஸ்.எஸ்.ஐக்கு கொலை மிரட்டல்

கோவை, மார்ச் 20: கோவை சிங்காநல்லூர் போலீசில் சிறப்பு எஸ்.ஐ ஆக பணியாற்றுபவர் குணசேகரன். இவரிடம் ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (47) என்பவர் வழக்கு ெதாடர்பாக விசாரிக்க அழைத்து செல்லப்பட்ட தனது மகனை விடுவிக்கவேண்டும் என குணசேகரனிடம் கேட்டார். அவர் வழக்கு விசாரணை முடியவில்லை, விடுவிக்க முடியாது எனக்கூறி விட்டார். இதில் கோபமடைந்த சுரேஷ், குணசேகரனின் சட்டை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

Related Stories: