ரயில் மோதி 2 பேர் பலி

ஈரோடு, மார்ச் 20:   நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் தண்டபாணி (59). இவர் பள்ளிபாளையத்தில் உள்ள ஓட்டலில் கூலி வேலை பார்த்து வந்தார். தண்டபாணி நேற்று முன்தினம் ஈரோடு காவிரி ஆர்எஸ்.,க்கும் ஆனங்கூர் ஆர்எஸ்.,க்கும் இடைப்பட்ட பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு ரயில்வே போலீசார் தண்டபாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் ஈரோடு அருகே காசிப்பாளையம் பகுதியில் முதியவர் ஒருவர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்தார். தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு, விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர், ஈரோடு கசிப்பாபேட்டையை சேர்ந்த அருணாசலம் (75), என்பது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: