மாநகராட்சி சிறப்பு வருவாய் அலுவலர் சாவு

ஈரோடு,  மார்ச். 20:  ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா கொளநல்லி கரட்டூர் பகுதியை  சேர்ந்தவர் சுந்தரராஜ் (51). இவர் ஈரோடு மாநகராட்சி 1வது மண்டலத்தில்  சிறப்பு வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். சுந்தரராஜ் கடந்த சில ஆண்டாக  கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக சிகிச்சை  பெற்றும் குணமாகவில்லை. இதனால் சுந்தரராஜ் வாழ்க்கையில் விரக்தியமடைந்தார்.  கடந்த 6ம் தேதி வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார்.  அப்போது  கரட்டூரில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் பஸ் நிலையம் அருகே சுந்தரராஜ்  மயங்கி கிடந்துள்ளார். சுந்தரராஜை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு  தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு  அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சுந்தரராஜை கொண்டு சென்றபோது,  வழியிலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. சுந்தரராஜ் வயிற்றுவலியால் தற்கொலை  செய்து கொண்டாரா என்பது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Related Stories: