×

போடிநாயக்கன்பட்டியில் பெரியாண்டிச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சேலம், மார்ச் 20:சேலம்  மாவட்டம் போடிநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி  பெரியாண்டிச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி காலை  6 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த வாரம் முகூர்த்தக்கால் நடப்பட்டது. அம்மனுக்கு கண்திறப்பு நிகழ்ச்சி  இன்று 20ம் தேதி இரவு 12 மணிக்கும், விநாயகர் வழிபாடு 21ம் தேதி அதிகாலை  5 மணிக்கும் நடக்கிறது. தொடர்ந்து தீர்த்தக்குட ஊர்வலம், விக்னேஸ்வர பூஜைகளும், கோபுர கலசங்களில் தானியங்கள் நிரப்புதல், விமான கோபுர கலசம் வைத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 22ம் தேதி காலை மங்கள வாத்தியம் முழங்க கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு விழா குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : Kumbhabhishekam Periyanti Amman Temple ,Bodinayankeppatti ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி