அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம்

ஓமலூர், மார்ச் 20: சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளின் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், பாமக மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணையன், தமாகா மாவட்ட தலைவர் சுசிந்திரகுமார், பாஜ மாவட்ட தலைவர் சவுந்தரராஜன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். ஆனால், அதிமுகவின் சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சரவணன் கலந்து கொள்ளவில்லை. இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகள் குறித்தும், பணிக்குழு அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

 பேச வாய்ப்பு அளிக்காததால் கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் பலர் பாதியிலேயே எழுந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கூட்டம் முடிந்த பின்பு அதிமுக வேட்பாளர் சரவணன் கட்சி அலுவலகத்திற்கு வந்து, அதிமுக நிர்வாகிகளை தனியாக சந்தித்து ஆலோசித்துள்ளார். மேலும் நாளை நடைபெறவுள்ள வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார். இச்செயல் கூட்டணி கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories: