இடைப்பாடி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் போக்சோவில் கைது

இடைப்பாடி, மார்ச் 20: இடைப்பாடி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி அரசு பள்ளியில், 1ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வளையசெட்டியூர் காலனி அருகே சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணப்பன்(75). என்பவர், கடையில் சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி, சிறுமியை அருகில் இருந்த தோப்பிற்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால், திடுக்கிட்ட அவர்கள் பூலாம்பட்டி ேபாலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தனர். இதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் கண்ணப்பனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: