×

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஜலகண்டாபுரம், மார்ச் 20: பொள்ளாச்சியில் நடந்த பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து, ஜலகண்டாபுரத்தில் அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜலகண்டாபுரத்தில் பொள்ளாச்சியில் நடந்த பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில், ஜலகண்டாபுரம் பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ேவண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ராஜாத்தி, திமுக நகர செயலாளர் தமிழ் தென்றல், த.மு.மு.க. சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் அமானுல்லா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கவிதா, மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் நாஸர் கான் மற்றும் சுப்ரமணியம், மேவை.சண்முகராஜா, சீனிவாசன், ராஜேந்திரன், அசோகன், மாரியப்பன், வெங்கடேசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


Tags : parties ,incident ,Pollachi ,
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!