சேலம், மார்ச் 20: சேலம் அம்மாப்பேட்டை சித்தேஸ்வரா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(52) இவரது வீட்டில் கிருஷ்ணமூர்த்தி(32) என்ற வாலிபர் மனைவியுடன் வசித்து வந்தார். வீடு வாடகை தொடர்பாக உரிமையாளர் கிருஷ்ணமூர்த்திக்கும், வாடகைக்கு வசித்து வரும் கிருஷ்ண மூர்த்திக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். வாடகை உயர்த்தி தரவில்லை என்றால் வீட்டை காலி செய்யுங்கள் என உரிமையாளர் கூறி வந்தார். இந்நிலையில் கடந்த 2016ம்ஆண்டு நவம்பர் மாதம் 12ம்தேதி, காலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, கத்தியால் வாலிபர் கிருஷ்ணமூத்தியை குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மனைவி கவுரி கண்முன்னே இந்த சம்பவம் நடந்தது. இந்த வழக்கு சேலம் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு வழக்கறிஞர் வீரக்குமார் வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதரன், வீட்டு உரிமையாளர் கிருஷ்ணமூர்த்திக்கு ஆயுள் தண்டனையும் ₹1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.