×

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கொமதேக ஈஸ்வரன் பேச்சு கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டை என்பதை தேர்தல் முடிவு நிரூபிக்கும்

நாமக்கல், மார்ச் 20:  கொங்கு மண்டலம் திமுக கூட்டணி கட்சியின் கோட்டை என்பதை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நிரூபிக்கும் என நாமக்கல்லில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஈஸ்வரன் பேசினார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. ஒன்றிய திமுக செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார். மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன், திமுக கூட்டணி வேட்பாளர் சின்ராஜை அறிமுகம் செய்து வைத்தார். அவர் பேசுகையில், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளரை வெற்றிபெற வைப்போம். அதற்காக கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றார். கூட்டத்தில் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேசுகையில், தமிழகத்திலுள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அதிமுகவின் கோட்டை என கொங்கு மண்டலத்தை அதிமுகவினர் கூறிவருகிறார்கள்.

அந்த பொய் பிரசாரம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் முடிவுக்கு வரும். கொங்கு மண்டலம் திமுக கூட்டணி கட்சிகளின் கோட்டை என்பதை இந்த தேர்தல் நிரூபிக்கும். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் அரசியல் பயணம் இனி அனைத்து தேர்தல்களிலும் திமுகவுடன் தான் இருக்கும். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் அதிமுக ஆட்சிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெண்கள் திரும்பி உள்ளனர் என்றனர். கூட்டத்தில், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சின்ராஜ், திமுக சட்ட திட்ட குழு உறுப்பினர் நக்கீரன், நகர திமுக பொறுப்பாளர் ஆனந்த், மதிமுக வழக்கறிஞர் பழனிசாமி, கொமதேக மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் குழந்தான், நகர செயலாளர் தம்பிராஜா, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜெயமணி, விடுதலைச் சிறுத்தைகள் ஆற்றலரசு, ஆதித்தமிழர் பேரவை மணிமாறன், திராவிடர் கழகம் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Meeting ,Candidate ,DMK ,
× RELATED மோடியிடமிருந்து இந்தியாவை...