ஜலகண்டாபுரம், மார்ச் 20: ஜலகண்டாபுரத்தில் செயல்பட்டு வரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கொங்கணாபுரம் கிளை சேவை மையத்தில் வாரந்தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறுகிறது. நேற்றைய ஏலத்திற்கு ஜலகண்டாபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 12 டன் தேங்காய் பருப்புகளை கொண்டு வந்தனர். தரத்திற்கேற்றாற்போல் முதல் தரம் குறைந்தபட்சமாக கிலோ ₹75 முதல் அதிகப்பட்சமாக ₹98.60 வரையும், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக கிலோ ₹40 முதல் அதிகப்பட்சமாக ₹58 வரையிலும் ஏலம் போனது. ஆகமொத்தம் 12 டன் தேங்காய் பருப்பு, ₹15 லட்சத்திற்கு விற்பனையானது.