×

ராசிபுரம் வாரச்சந்தையில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

ராசிபுரம், மார்ச் 20: ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட வாரச்சந்தையில் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் துணி பைகளை வழங்கினர். தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் விஜயஸ்ரீ தலைமையில், நகராட்சி ஊழியர்கள் வாரச்சந்தையில் பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளதா என சோதனை நடத்தினர். இதில் சுமார் இரண்டு கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு துணி பைகள் வழங்கப்பட்டது. ஆய்வின்போது, சுகாதார அலுவலர்கள் பாலகுமார ராஜூ, சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Rasipuram ,
× RELATED பயிற்சி வகுப்பில் தூங்கி வழிந்த அலுவலர்கள்