×

ஓசூரில் மார்க்சிஸ்ட் நிர்வாகிகளுட ன் திமுக வேட்பாளர் சந்திப்பு

ஓசூர், மார்ச் 20: ஓசூரில், மார்க்சிஸ்ட் நிர்வாகிகளை சந்தித்து திமுக வேட்பாளர் சத்யா ஆதரவு கோரினார். நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெறும் சட்டமன்ற  இடைத்தேர்தலில், ஓசூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சத்யா போட்டியிடுகிறார்.  இவர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ.,   வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை  செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், தொமுச மாவட்ட கவுன்சில் கோபாலகிருஷ்ணன்  மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுடன், ஓசூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த மாவட்ட  செயலாளர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர் மூர்த்தி, சிஐடியூ மாவட்ட செயலாளர்  பீட்டர்  ஆகியோருக்கு, திமுக வேட்பாளர் சத்யா சால்வை அணிவித்து ஆதரவு கோரினார். அவர்கள், சட்டமன்ற இடைத்தேர்தலில் சத்யாவை, அதிகப்படியான வாக்குகள்  வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்பது என உறுதியளித்தனர். இந்த சந்திப்பின்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, சுரேஷ், மாவட்ட  குழு உறுப்பினர் சேதுமாதவன், கோதண்டராமன்,  ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பொன்.சங்கர், ஆனந்தகுமார் மற்றும் சிஐடியூ., வாலிபர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : candidate ,DMK ,meeting ,Marxist ,executives ,Hosur ,
× RELATED மோடியிடமிருந்து இந்தியாவை...