×

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உபகரணம் வழங்கல்

ஊத்தங்கரை, மார்ச் 20: ஊத்தங்கரை தொடக்கப் பள்ளியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான ஊக்கம் தரும் தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளி மாணவர்கள் தனித்திறமையை வெளிப்படுத்தும் பாட்டு பாடுதல், நகைச்சுவை, நடனம் போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வண்ண ஆடைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் உமா, கவிதா பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழா