×

பென்னாகரம்- ஒகேனக்கல் சாலையில் நடுரோட்டிற்கு வந்து சண்டையிட்டுக்கொண்ட யானைகள்

பென்னாகரம், மார்ச் 20: பென்னாகரம்- ஒகேனக்கல் சாலையில் 2 யானைகள் சண்டையிட்டுக்கொண்டது. இதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மேலும், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கர்நாடக வனப்பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த ஒரு மாதமாக ஒகேனக்கல் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், சாலையை கடந்து கிராமப்பகுதிக்குள் நுழைவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு 7 மணி அளவில், வனப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் இருந்து வந்த 2 யானைகள் பென்னாகரம்-ஒகேனக்கல் சாலையில் ஆக்ரேஷமாக சண்டையிட்டபடி இருந்தது. இதனைக்கண்டு அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். வாகனங்களை நிறுத்திவிட்டு யானைகள் போகும் வரை காத்திருந்தனர். ஆனால், யானைகள் தொடர்ந்து சண்டையிட்டபடி சுமார் 2 மணி நேரம் போக்கு காட்டியது. பின்னர், பஸ் டிரைவர்கள் தொடர்ந்து ஹாரன் ஒலித்ததால் அங்கிருந்து ஓட்டம் பிடித்த யானைகள், அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றது. இதனால், இரவு 9 மணி வரை வாகன ஓட்டிகள் தவியாய் தவித்தபடி இருந்தனர். யானைகளின் அட்டகாசத்தால் சிலர் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை சாலையில் போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். யானைகள் சென்ற பின்பு மீண்டும் வாகனங்களை எடுத்துச் சென்றனர்.

Tags : Elephants ,jungle ,road ,Pennakaram-Hogenakkal ,
× RELATED முதுமலை முகாமில் குழந்தையை போல் உறங்கிய தாயை பிரிந்த குட்டி யானை