×

அரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் முதல் நாளில் வேட்புமனு தாக்கல் இல்லை

அரூர், மார்ச் 20: அரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. அரூர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, கோட்டாட்சியர் அலுவலகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியக்கோடி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தயார் நிலையில் இருந்தனர். காவல்துறை சார்பில் 100 மீ., தூரத்திற்கு பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. செவ்வாய்க்கிழமை என்பதால் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது. இன்று புதன்கிழமையுடன் பௌர்ணமி தினம் என்பதால் பலர் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Arar Assembly Election ,Election ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...