கஞ்சா விற்ற மூதாட்டி கைது

திருவெறும்பூர், மார்ச் 20:  திருவெறும்பூர்  அருகே உள்ள காந்திநகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக திருவெறும்பூர்  இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில்  இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது காந்திநகரை சேர்ந்த ஞானசவுந்தரி (62) என்பவர் முட்காட்டுப்  பகுதியில் கஞ்சா பொட்டலங்களை விற்றுக் கொண்டிருந்தது தெரிந்தது. அவரை  போலீசார்  கைது செய்து 200 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories: