திருச்சி, மார்ச் 20: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து திருச்சி கிஆபெ விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். நீதிமன்றம் அறிவித்த இழப்பீடு தொகையை அரசு வழங்க வேண்டும். 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சிபிசிஐடி போலீசார் 20 பேர் என கூறியுள்ளனர். அவர்களையும் கைது செய்ய வேண்டும். சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.