பேரல் தண்ணீரில் விழுந்து 3 வயது குழந்தை சாவு

திருச்சி, மார்ச் 20: திருச்சி திருவானைக்காவல் அருள்முருகன் கார்டனை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (25). பிரியாணி கடையில் மாஸ்டராக உள்ளார். இவரது மகன் விஜய் (3). கடந்த 17ம் தேதி கிறிஸ்டோபர் மனைவி வீட்டின் பின்புறம் துணி துவைத்து கொண்டிருந்தார். கிறிஸ்டோபர் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை விஜய் அங்கிருந்த சிறிய பேரல் தண்ணீரில் தலைகுப்புற விழுந்தது. இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த கிறிஸ்டோபர் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை குழந்தை இறந்தது. இதுகுறித்து ரங்கம் போலீஸ் எஸ்ஐ தயாளன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories: