×

2 கூரைவீடுகள் எரிந்து சாம்பல்

திருத்துறைப்பூண்டி, மார்ச்20: திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது வீட்டின் பின்புறம் இருந்த வைக்கோல் போர் நேற்றுமதியம் தீப்பிடித்து எரிந்து அவரது வீட்டிற்கும் பரவி அருகில் இருந்த பாலையன் என்பவரது கூரை வீட்டிலும் தீப்பிடித்து அவரது வீட்டின் பின்புறம் இருந்த வைக்கோல் போரும் தீப்பிடித்து எரிந்தது இது குறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயைஅனைத்துமேலும் தீ பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் இரண்டு கூரைவீடுகளும் வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்களும் எரிந்து சேதமானது.தீவிபத்து குறித்தும், சேத மதிப்பும் திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.

Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...