×

2 பஸ்கள் மோதல் 15பேர் படுகாயம்

நீடாமங்கலம்,மார்ச்20: நீடாமங்கலம் அருகே 2 பஸ்கள் மோதியதில் 15 பேர் படுகாயமடைந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து குடந்தை நோக்கி நேற்று காலை தனியார் பஸ் ஒன்று வேகமாக வந்தது.அதனை பின் தொடர்ந்து குடந்தை அருகில் உள்ள கோவிலச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி பஸ் வந்து கொண்டிருந்த போது நீடாமங்கலம் அருகில் உள்ள சீத்தாராமன் சாவடி என்ற இடத்தில் ஆடு ஒன்று குறுக்கே சென்றதால் வேகமாக சென்ற தனியார் பஸ் நடத்துனர் நிலை தடுமாறி பிரேக்போட்டுள்ளார். இதனையறியாத கல்லூரி பஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பின்புறமாக தனியார்பஸ்சில் மோதியது. .இதில் கல்லூரி பஸ்சில் சென்ற மாணவிகள் மன்னார்குடியை சேர்ந்த கனகபிரியா(18), சவுமியா(18) ,இர்பான்(18), ஆய்சாநர்சின்(22)செட்டிமுலையை சேர்ந்த சுவாதி(19),பெரியகுருவாடி இலக்கியா(20), ஆகியோரும்,தனியார்பஸ்சில் சென்ற மன்னார்குடியை சேர்ந்த மோகன்ராஜ்(27),பிரபாவதி(68) உள்ளிட்ட 15பேர் படுகாயமடைந்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...