×

நீடாமங்கலத்தில் இருந்து 1890 டன் நெல் மூட்டைகள் திருப்பூர், புதுகைக்கு அரவைக்கு அனுப்பி வைப்பு

நீடாமங்கலம்,மார்ச்20: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி பகுதியிலிருந்து நெல் மற்றும் அரிசி மூட்டைகள் கொண்டுவரப்பட்டு  நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டத்திற்கு ரயில் வேகன்களில் பொது விநியோகத்திட்டத்திற்கு அரிசியும், அரவைக்காக நெல் மூட்டைகளும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று  நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து   நேற்று 75 லாரிகளில் 945 டன் பொது ரக நெல் மூட்டைகள்  நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து 21 ரயில்வே வேகன்களில் திருப்பூர்  மண்டலத்திற்கும், அதே போன்று நேற்று 75லாரிகளில் 945 டன் பொது ரக நெல் மூட்டைகள்  நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து 21 வேகன்(ரயில் பெட்டிகளில்) புதுக்கோட்டை மண்டலத்திற்கு அரவைக்கு தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பி வைத்தகனர்.

Tags : Neemamangalam ,Nedumangalam ,Tirupur ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு