×

வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 20: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் கோலப் போட்டிகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், நகராட்சி வளாகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலப்போட்டி நடைபெற்றது. இதில் நகராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் குழுவினர் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம், எனது ஒட்டு 100 சதவீதம் விற்பனைக்கு இல்லை,  அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வண்ண கோலங்கள் போட்டிருந்தனர். நகராட்சி ஆணையர் (பொ) பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஏப். 19 தேர்தல் அன்று தொழிலாளர்களுக்கு...